Our Feeds


Thursday, July 20, 2023

ShortNews

எமக்கு பிச்சை வேண்டாம் உரிமை தான் வேண்டும்! - ஜனாதிபதிக்கு சாணக்கியன் பதிலடி



தான் ரணில் ராஜபக்ஷ அல்ல, நான் ரணில் விக்கிரமசிங்க என்று அண்மையில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மேலும் தான் வழங்க போவதை நீங்கள் ஏற்று கொள்ள போகிறர்களா இல்லையா என்று ஜனாதிபதி கேட்கிறார் என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.


தமிழருக்கு இந்த நாட்டில் உரிமை உண்டு, எமக்கு நான் இதுதான் தருவேன் எடுத்துக் கொள்ளுங்கள் என்று எமக்கு பிச்சை போட்டு எம்மை ஏமாற்ற வேண்டாம் எனவும் பாராளுமன்றத்தில் உரையாற்றிய சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியும் விரைவில் வீடு செல்ல வேண்டி வரும், எமக்கான உரிமைகளை சரியான முறையில் தராவிடின் நாட்டுக்கான கடன் அதிகரிக்குமே தவிர முதலீடுகள் கிடையாது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »