Our Feeds


Tuesday, August 15, 2023

SHAHNI RAMEES

மாங்குளம் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

 

மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ9 வீதி பனிச்சங்குளம் பகுதியில் இன்று (15) அதிகாலை விபத்து ஏற்பட்டுள்ளது. 



கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது. குறித்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.



இது தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,



முல்லேரியா புதிய நகரம், வெல்லம்பிட்டி மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 38, 46 மற்றும் 58 வயதுடையவர்களே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.



இந்த விபத்து வீதிக்கருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின் பின்பகுதியில் வேன் மோதிய நிலையில் குறித்த லொறி முன்னால் சென்ற மற்றுமொரு லொறியுடன் மோதியதில் இடம்பெற்றுள்ளது.



லொறியின் பின்பகுதியில் பயணித்த ஒருவரும், வேனின் முன் இருக்கையில் பயணித்த நபர் ஒருவரும் படுகாயங்களுக்கு உள்ளாகி மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளனர்.



மேலும், வேனில் பயணித்த மூன்று பெண்களும், லொறியில் பயணித்த ஆண் ஒருவரும் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், லொறியில் பயணித்த மூன்று ஆண்கள் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



இந்த விபத்து தொடர்பில் வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »