Our Feeds


Saturday, August 12, 2023

ShortTalk

சிலாபத்தில் 9 வயதுச் சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் மரணம்! விசாரணைகள் தீவிரம்



சிலாபம் இரணைவில பிரதேசத்தில் ஒன்பது வயதுச் சிறுமி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


தனது மகள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதையடுத்து, சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறுமியின் தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

சிறுமியின் தாயார் வெளிநாட்டில் உள்ளதால், சடலத்தின் பிரேத பரிசோதனை மற்றும் நீதவான் பரிசோதனை இன்று நடைபெறவுள்ளது.

இது கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »