Our Feeds


Thursday, August 17, 2023

ShortNews Admin

கர்ப்பப்பை குழாய் வெடித்து ஆசிரியை உயிரிழப்பு - நடந்தது என்ன?



யாழ்ப்பாணம் புலோலியை சேர்ந்த மன்னார் சென் சேவியர் பெண்கள் கல்லூரியின் ஆசிரியையான அனுசன் துளசி (வயது 30) என்பவர் நேற்றைய தினம் புதன்கிழமை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

திடீர் வயிற்று வலி ஏற்பட்ட நிலையில் அவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.

 


உடற்கூற்று பரிசோதனையின் போது கர்ப்பப்பை குழாயினுள் கரு தங்கியமையால் கர்ப்பப்பை குழாய் வெடித்து மரணம் சம்பவித்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »