சிறிய ரக லொறியொன்று பள்ளத்தில் புரண்டத்தில் பிக்குகள் உட்பட 12 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள், தெல்தெனிய மற்றும் உடுதும்பர வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெல்தெனிய தலைமையக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஹசலக்க கொலங்கொட கங்காராம விகாரைக்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்
