Our Feeds


Sunday, December 24, 2023

News Editor

அஸ்வெசும குறித்து ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு


 நாட்டில் அஸ்வெசும பயன்பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

 

இதன்படி அடுத்த ஆண்டு முதல் இந்த எண்ணிக்கை 400,000 குடும்பங்களால் அதிகரிக்கப்பட்டு, 2.4 மில்லியன் குடும்பங்கள் நன்மை பெறும் என்று தெரிவிக்கப்படுகிறது.

 

அஸ்வெசும திட்டத்துக்குள் உள்வாங்கப்படுகின்றவர்களுக்கு சிறுநீரகத் தொகுதி போன்ற நிவாரணங்களும் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

 

இந்த நடவடிக்கைகளுக்காக வரவு செலவு திட்டத்தின் ஊடாக 207 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »