Our Feeds


Saturday, December 23, 2023

News Editor

மாத்தறை சிறைக்கைதிகளை வேறு சிறைகளுக்கு மாற்ற நடவடிக்கை


 மாத்தறை சிறைச்சாலையில் மூன்று கைதிகள் மூளைக்காய்ச்சலுக்கு உள்ளானமை கண்டறியப்பட்டதை அடுத்து மாத்தறை சிறைச்சாலைக்கு அனுமதிக்கப்படும் கைதிகளை அங்குணுகொலபெலஸ்ஸ மற்றும் பூஸா சிறைச்சாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மூளை காய்ச்சலுக்கு உள்ளான மூன்று நோயாளிகளும் மாத்தறை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கைதிகளை பார்வையிட வருபவர்களுக்கு எதிர்வரும் 10 நாட்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »