Our Feeds


Sunday, January 21, 2024

News Editor

பொருளாதாரப் பயங்கரவாதத்தை எதிர்நோக்கி வரும் இலங்கை – சஜித்


 எமது நாட்டைப் பயங்கரவாதத்திலிருந்து போர்வீரர்கள் காப்பாற்றிய போதிலும் இன்று எமது நாடு பொருளாதாரப் பயங்கரவாதத்தை எதிர்நோக்கி வருவதாகவும் நாட்டின் தற்போதைய நிலைமை பொருளாதாரப் பயங்கரவாதமாகவே காணப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பயங்கரவாதிகள் என்பது மக்களின் உயிரைப் பறிப்பவர்கள் என்றும், மத்திய வங்கி மீதான தாக்குதல் பயங்கரவாதத் தாக்குதல் என்றும், நாட்டின் உழைக்கும் மக்களின் நலன்புரி நிதியில் ஏற்பட்ட பாதிப்பும் பயங்கரவாதமே என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இன்று (20) களுத்துறையில் நடைபெற்ற சமகி ரணவிரு பலவேகக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »