Our Feeds


Tuesday, January 23, 2024

News Editor

கார் மீது ரயில் மோதியதில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணி இருவர் படுகாயம்


  

பெலியத்தையிலிருந்து மாகோ நோக்கி சென்று கொண்டிருந்த ரஜரட்ட ரெஜின கடுகதி ரயிலில் கார் ஒன்று மோதிய விபத்தில் இரு சுற்றுலாப்பயணிகள் காயமடைந்துள்ளனர்.

 

மிதிகம ரயில் கடவையில் இன்று செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற குறித்த விபத்தில் காரில் இருந்த இரண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பயணித்துள்ளனர்.

 

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த உள்ளூர் சுற்றுலா வழிகாட்டி மற்றும் ஒரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

ரயில் செல்வதற்கான சமிக்ஞை ஒளித்துக்கொண்டிருந்த போது குறித்த கார் பாதுகாப்பற்ற முறையில் பயணித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »