Our Feeds


Sunday, January 28, 2024

News Editor

அரசியல் கட்சிகளை அபிவிருத்தி செய்வதற்கு முன்னர் நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும்


 நாடு உலகத்துடன் முன்னோக்கிச் செல்ல வேண்டுமாயின் அதனை நிறைவேற்ற வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

அரசியல் கட்சிகளை அபிவிருத்தி செய்வதற்கு முன்னர், முதலில் தமது நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும் என அபேவர்தன தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய நிதி நிறுவனங்களுடனான பேச்சுவார்த்தையின் மூலம் பொருளாதார மாற்றங்களும் இறுதி இலக்குகளும் வெற்றிகொள்ளப்பட்டதன் காரணமாகவே சில அரசியல் தலைவர்கள் பாராளுமன்ற அமர்வின் முடிவு குறித்து பல்வேறு கதைகளை கூறுகின்றனர் எனவும் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பாக தேசிய கொள்கை கட்டமைப்பு பற்றி மீண்டும் கூறினார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »