Our Feeds


Wednesday, January 24, 2024

News Editor

தேசிய அடையாள அட்டை இலக்கத்தை தனிநபரின் வரி இலக்கமாக (TIN) பயன்படுத்த நடவடிக்கை!


 தேசிய அடையாள அட்டை இலக்கத்தை தனிநபரின் வரி இலக்கமாக (TIN) பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.

இதன் மூலம் அரசாங்க வருமானம் குறித்து தெளிவான தரவு அமைப்பு உருவாக்கப்படும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

18 வயதுக்கு மேற்பட்டவர்களின் தகவல் அமைப்பைப் பயன்படுத்தி இந்த செயல்முறை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மக்களுக்கு இலகுவாக ரின் இலக்கம் வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர்  இதனைத் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »