Our Feeds


Thursday, February 29, 2024

News Editor

கிராம உத்தியோகத்தர் நேர்காணலுக்கான திகதி அறிவிப்பு


 புதிய கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப்பரீட்சை மார்ச் 13ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.

நேர்முகத்தேர்வுகள் எதிர்வரும் 13, 14 மற்றும் 15ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற கிராம உத்தியோகத்தர் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற 4,232 பேர் நேர்காணலில் பங்கேற்க உள்ளனர்.

நேர்முக பரீட்சைகளின் பின்னர் வெற்றிடங்கள் மிக விரைவாக நிரப்பப்படும் என இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »