Our Feeds


Thursday, February 29, 2024

News Editor

யாழில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் போராட்டம்


 யாழ்ப்பாணத்தில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவரும் தனியார் பேருந்து உரிமையாளா்கள் இ.போ.ச பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.


யாழில் முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாமையை கண்டித்து உள்ளூர் மற்றும் நீண்டதூர தனியாh் பேருந்து சாரதிகள்இ நடத்துனா்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனா்.


இதனால்தனியார் போக்குவரத்து சேவைகள் மாகாண மட்டத்தில் முடங்கியுள்ளது. 


இந்த சூழ்நிலையில்இ இ.போ.ச பேருந்துகளும் சேவையில் ஈடுபட முடியாதளவு நெருக்கடி ஏற்படுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


பொலிஸார் தலையிட்டு சில இ.போ.ச பேருந்துகளை முற்றுகையிலிருந்து விடுவித்த போதும் சுமுகமான சேவை இடம்பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினா் ஒருவர் தனியார் பேருந்து உரிமையாளா்களின் கோரிக்கை தொடா்பாக பேசுவதற்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிலரை ஆளுநா் மற்றும் அரச அதிபரை சந்திக்க அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »