Our Feeds


Sunday, February 11, 2024

News Editor

நாடு திரும்பினார் ஜனாதிபதி


 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இடம்பெற்ற 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொண்டு நேற்று இரவு நாடு திரும்பினார்.


ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-309 மூலம் ஜனாதிபதி மற்றும் தூதுக்குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 8 ஆம் திகதி இரவு அவுஸ்திரேலியாவிற்கு பயணமானார்.


தனது விஜயத்தின் போது, 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் முக்கிய உரையை ஆற்றிய அவர், பல நாடுகளின் அரச தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »