Our Feeds


Saturday, March 2, 2024

ShortNews Admin

காத்தான்குடியில் கைதான ஸஹ்ரானின் மச்சான் உள்ளிட்ட 30 பேரும் பிணையில் விடுதலை.



காத்தான்குடியில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 30 பேரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் வெள்ளிக்கிழமை (1) மாலை ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை சரீரப்பிணையில் செல்ல அனுமதித்ததுடன் எதிர்வரும் 26ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.


காத்தான்குடி பாலமுனை பகுதியில் வீடு ஒன்றில் சட்டவிரோதமாக கூட்டம் நடாத்திய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையான ஸஹ்ரான் ஹாசிமின் சகோதரியின் கணவர் மற்றும் 4 பேர் உட்பட 30 பேரை சந்தேகத்தின் பேரில் வெள்ளிக்கிழமை (01) அதிகாலையில் பொலிசார் கைது செய்யப்பட்டனர்.


இதன்போது 23 மோட்டார் சைக்கிள்கள் ஆட்டோ ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளுக்கு பொலிசாரால் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


இதில் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் நேற்று (1) மாலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை சரீரப்பிணையில் செல்ல அனுமதித்ததுடன் எதிர்வரும் 26ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.


நன்றி: தமிழன்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »