Our Feeds


Monday, March 11, 2024

News Editor

மார்ச் மாதத்தில் மாத்திரம் 40,877 சுற்றுலாப் பயணிகள் வருகை




 மார்ச் மாதத்தின் கடந்த ஆறு நாட்களில் மாத்திரம் 40,877 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், ரஷ்யாவில் இருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, ரஸ்யாவில் இருந்து 50,800 பேரும், இந்தியாவில் இருந்து 5,602 பேரும் ஜேர்மனியில் இருந்து 4,110 பேரும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

கடந்த மாதத்தில் மாத்திரம் 218,350 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »