Our Feeds


Monday, March 25, 2024

ShortNews Admin

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு ஏப்ரல் முதல் வழங்கப்படும்..!


 அரச ஊழியர்களின் அதிகரிக்கப்பட்ட 10,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.


மேலும், குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிவாரணமாக வழங்கப்படவுள்ள 10 கிலோ அரிசி, எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன் வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, ஓய்வூதியக் கொடுப்பனவாக அதிகரிக்கப்பட்டுள்ள 2,500 ரூபாய் தொகை ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »