Our Feeds


Wednesday, March 13, 2024

News Editor

வெப்பமான வானிலை அதிகரிக்கும்


 நாட்டின் பல பகுதிகளில் வெப்பத்தின் அளவு தொடர்ந்தும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 
மேல், வடமேல், சப்ரகமுவ, தென் மாகாணங்களிலும் அனுராதபுரம், மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மனித உடல் அதிகளவில் உணரக்கூடிய வகையில், உஷ்ணத்தின் அளவு அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மேற்படி பகுதிகளில் வசிக்கும் மக்கள் விசேட அவதானம் செலுத்த வேண்டுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »