Our Feeds


Tuesday, March 5, 2024

News Editor

சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்கள் ஏழாக குறைக்கப்படும்


 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக தற்போதுள்ள பாடங்களின் எண்ணிக்கை ஏழு பாடங்களாக குறைக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

மீதமுள்ள மூன்று பாடங்களை உள்நாட்டில் மாணவர்களுக்கு வழங்கக்கூடிய தொழில்துறை மற்றும் சுற்றுச்சூழல் அறிவை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

அவர்களின் விருப்பத்திற்கேற்ப திறமைகளை வெளிப்படுத்தும் பாடப் பிரிவுகளில் தொழில்சார் பயிற்சிகளைப் பெறுவதற்குத் தேவையான பின்னணி தயாரிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »