Our Feeds


Thursday, April 18, 2024

SHAHNI RAMEES

குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து தாயின் பணம், நகை கொள்ளை...



 வவுனியா பகுதியில் குழந்தையின் கழுத்தில் கத்தியை

வைத்து தாயாரின் தங்க நகைகள் மற்றும் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற சம்பவமென்று பதிவாகியுள்ளது. இக்கும்பலை தேடி வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.




வவுனியா தெற்கு வலய கல்வி அலுவலகத்திற்கு அருகில் குறித்த பெண் வவுனியா நகரிலுள்ள கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு தனது குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது முகமூடி அணிந்த மூன்று பேர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி, குழந்தையை மோட்டார் சைக்கிளில் இறக்கிவிட்டு, அவர் வந்த மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனரென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.




இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »