Our Feeds


Thursday, April 18, 2024

SHAHNI RAMEES

தோட்டத் தொழிலாளர்களின் EPF, ETF கொடுப்பனவு – அடுத்த வாரம் அமைச்சரவைப் பத்திரம்....




அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும்

தோட்டத் தொழிலாளர்களுக்கு செலுத்தப்படாத EPF மற்றும் ETF கொடுப்பனவுகளை செலுத்துவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.


அரச பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார்.


இந்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைய, ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் நிலுவைக் கட்டணமாகவுள்ள 500 கோடி ரூபாவிற்கும் அதிக தொகை செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் தொழிலில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு செலுத்தப்படாதுள்ள EPF – ETF கொடுப்பனவுகள் தொடர்பில் ஊழியர்களால் சுமார் 2000-இற்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நாளாந்த தேசியப் பத்திரிகையொன்று செய்தி வௌியிட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »