Our Feeds


Monday, April 1, 2024

ShortNews Admin

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு..!




 மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள மூதூர் -பஹ்ரியா நகர் கலப்புக் கடலில் இன்று திங்கட்கிழமை உயிரிழிந்து நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

 

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டர் மூதூர் -பஹ்ரியா நகரைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான அப்துல் ஹமீது நப்ரீஸ் (வயது 39) என தெரியவருகின்றது.

 

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவரின் கை, கால்கள் கயிறுகளால் கட்டப்பட்டு வைற்றில் மண் மூட்டையும் கட்டப்பட்டுள்ளது. இதனால் கொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டிருக்கலாமென தெரியவருகின்றது.

 

இதனையடுத்து மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான் இன்று பகல் குறித்த இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »