Our Feeds


Thursday, April 25, 2024

ShortTalk

தேவாலய ஆராதனையில் இருந்த பெண் உயிரிழப்பு - நடந்தது என்ன?



மதுரங்குளி பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற தேவாலய ஆராதனையின் போது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


குறித்த பெண் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


ஹலவத்த பிரதேசத்தில் வசித்து வந்த 58 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


விசாரணையில் அந்த பெண்ணுக்கு நீண்ட நாட்களாக இதயநோய் மற்றும் சளி பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.


போதகர் பிரார்த்தனை செய்து அந்த தண்ணீரை பெண்ணுக்கு குடிக்க கொடுத்த பிறகு ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக பெண் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.


சடலம் புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று (25) இடம்பெறவுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »