Our Feeds


Sunday, April 14, 2024

News Editor

கார் விபத்தில் இருவர் உயிரிழப்பு


 கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த கார் இன்று (14) ஹாலியால ஸ்ரீ வீர சக்தி விநாயகர் ஆலயத்திற்கு அருகில் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.


புத்தாண்டை முன்னிட்டு இன்று காலை கொழும்பில் இருந்து பதுளை நோக்கி வந்த கார் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.


51 மற்றும் 62 வயதுடைய இரண்டு பெண்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


ஹலியாலா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »