மொரட்டுவ, கட்டுபெத்த பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
சில காலமாக நிலவி வந்த தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலில் காயமடைந்த மூவரும் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 28 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மொரட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.