Our Feeds


Monday, April 29, 2024

ShortNews Admin

பிலிப்பைன்ஸில் கடும் வெப்பம் – பாடசாலைகளுக்கு விடுமுறை


 பிலிப்பைன்ஸ் நாட்டில் கடும் வெப்பம் நிலவி வருவதால் 2 நாட்கள் அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கு விடுமுறை வளங்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பிலிப்பைன்ஸின் தலைநகர் பகுதியில் அடுத்த மூன்று நாட்களில் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை (98.6 டிகிரி பாரன்ஹீட்) நிலவக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையான வெப்பக் குறியீடு 45 டிகிரி செல்சியஸ் என்ற அபாயகரமான மட்டத்திற்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, மே மாதம் இரண்டாவது வாரம் வெப்பக் குறியீடு ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் வெப்பத்தினால் ஏற்பட்ட வரட்சியினால் ஏப்ரல் மாதம் ஆரம்பத்தில் 13 மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »