Our Feeds


Monday, April 29, 2024

ShortNews Admin

இங்கிலாந்துக்கு சிறுவன் ஒருவனை கடத்த முயன்ற 02 பெண்கள் கைது

சட்டவிரோதமான முறையில்17 வயதுடைய சிறுவன் ஒருவனை இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லும் முயற்சித்த இரண்டு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் எல்லை அமலாக்க பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது மகனின் தகவல்களைப் பயன்படுத்தி போலி ஆவணங்களை தயாரித்து வேறு ஒரு பெண்ணைப் பயன்படுத்தி குறித்த சிறுவனை கடந்த 26ஆம் திகதி இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் குறித்த சிறுவனை

அழைத்துக் கொண்டு சம்பவ தினத்தன்று ஶ்ரீலங்கன் விமானத்தில் லண்டன் செல்வதற்காக கட்டுநாயக்கவிற்கு வந்துள்ளார்.

இதன்போது, விமான சேவை அதிகாரி ஒருவருக்கு, ஆவணங்கள் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் இருவரும் விமான நிலைய குடிவரவு குடியகல்வு திணைக்கள எல்லை கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது, மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப சோதனையில் குறித்த ஆவணங்கள் போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

பின்னர், சிறுவனை வேறு இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்ததில், போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது.

குடிவரவு குடியகல்வு திணைக்கள எல்லை கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகளிடம் சந்தேகநபர்களை ஒப்படைத்துள்ளனர்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »