ஹகுரன்கெத்தவில் இருந்து கண்டி வரை பயணம் செய்த இ.போ.சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று மயிலபிட்டிய பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 9 பேர் காயமடைந்து கண்டி வைத்தியசாலையிலும் ரிக்கில்லகஸ்கட வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்ததில் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் ஆகிய இருவரும் அடங்குவதுடன் விபத்துக்கான காரணம் தொடர்பில் தலத்துஓயா பொலிஸ் அதிகாரிகள் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.