புதிய தொழில்நுட்பம் மற்றும் இணையதள வசதிகளை பயன்படுத்தி அனைத்து விவசாய மையங்களும் சந்தையையும் உற்பத்தியாளரையும் இணைக்கும் திட்டத்தை ஆரம்பிப்போம். விவசாய ஆராய்ச்சி நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு விவசாயிகளுக்கு புதிய தகவல்கள் வழங்கப்படும். ஸ்மார்ட் விவசாயத்திற்கு நாடு திரும்ப வேண்டும். பாடசாலைகளை போன்றே விவசாயிகளையும் ஸ்மார்ட் விவசாயிகளாக மாற்றும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி செயற்பட்டு வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
