Our Feeds


Wednesday, May 29, 2024

ShortNews Admin

வடக்கு ரயில் பாதை அபிவிருத்தி பணிகள் ஆகஸ்ட் மாதம் நிறைவு பெறும் -


வடக்கு ரயில் பாதை அபிவிருத்தி பணிகள் ஆகஸ்ட் மாதம் நிறைவு பெறும் என அதிவேக வீதி மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இதனை அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

எதிர்வரும் பௌர்ணமி தினத்திற்கு முன்பதாக  வடக்கு புகையிரத பாதையின் புனரமைப்பு பணிகள் நிறைவடைய வாய்ப்பில்லை.

எனவே, பொசன்  பௌர்ணமி தின விடுமுறையை முன்னிட்டு விசேட பஸ் சேவையொன்று அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த பஸ் சேவை பொசன் பௌர்ணமி தினத்தன்றும் அதற்கு முந்திய நாளிலும் அமுல்படுத்தப்படும்.

விசேட பஸ் சேவை அட்டவணை தொடர்பில் அறிவிக்கப்படும் எனவும், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் துறை பஸ் சேவையாளர்களுடனும் கலந்துரையாடி விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »