கொழும்பிலிருந்து தெஹிவளை நோக்கி பயணித்த கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் எதிர்புறத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு முச்சக்கர வண்டிகள் மற்றும் கார் மற்றும் கெப் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது .
தெஹிவளை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (17) இரவு இந்த வாகன விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
விபத்தை ஏற்படுத்திய இளைஞனை தெஹிவளை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .