லிட்ரோ எரிவாயு நிறுவனம் கடுவெல மாபிம பகுதியில் புதிய எரிவாயு நிரப்பு முனையம் ஒன்றை நாளை (08) திறந்து வைக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"புதிய நிரப்பு முனையம் நாளை திறக்கப்படும். கெரவலப்பிட்டி முனையம் போதாது. நாளொன்றுக்கு 60,000 சிலிண்டர்கள் வெளியிடப்படுகின்றன. டிசம்பரில் இருந்து வாரத்தில் 2 நாட்கள். பெப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் கெரவலப்பிட்டி மற்றும் மாபிம இரண்டும் செயற்பாட்டில் இருந்தன.
கெரவலப்பிட்டியை நிறுத்த வேண்டி ஏற்பட்டால், மாபிமவில் இருந்து தொடர்ச்சியாக எரிவாயுவை விநியோகிக்க முடியும்." என்றார்.
கேள்வி - தாங்கள் இவ்வாறு முதலீடு செய்து இந்தத் தொழிலை விரிவுபடுத்தும் போது, இதனை விற்பனை செய்யப் போவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனரே?
"எங்களின் நேரடி பங்களிப்பு இல்லை. பொறுப்பு வாய்ந்த குழு ஒன்று உள்ளது. அவர்களிடம் கேட்பதுதான் சரியாக இருக்கும். எமக்கு தெரியாது" என்றார்.