Our Feeds


Sunday, May 12, 2024

ShortNews Admin

தேசிய சொத்துக்கள் குறித்து வாய் கிழிய பேசும் சோசலிசவாதிகள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு விலைபோய் விட்டனர் - சஜித் பிரேமதாச

தேசிய சொத்துக்கள் குறித்து வாய் கிழிய பேசும், மாற்று தரப்பு என்று கூறிக் கொள்ளும் ஏனைய கட்சிகளைப் போல், பன்னாட்டு நிறுவனங்களுக்கு நாட்டை தாரை வார்க்க மாட்டேன். ஏலம் விடமாட்டேன். பன்னாட்டு நிறுவனங்களால் சஜித் பிரேமதாசவை விலைக்கு வாங்க முடியாது என்பதை பால் உற்பத்தி செய்யும் பால் பண்ணையாளர்களுக்கும், கால்நடை அபிவிருத்தி திணைக்களத்துக்கு சொந்தமான பண்ணைகளில் வேலை செய்பவர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய வளங்கள் குறித்து வாய் கிழிய பேசும் கம்யூனிஸ, மார்க்சிஸ, தீவிர போக்குடையவர்கள் தங்கள் கொள்கைகளுக்கு துரோகம் செய்து நாட்டை

பணத்திற்காக விற்றுவிட்டனர். ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அவ்வாறானதொன்றுக்கு இடமில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »