Our Feeds


Friday, May 10, 2024

SHAHNI RAMEES

துப்பாக்கியை காட்டி நகைக்கடையில் கொள்ளை


 ஹோமாகம நகரிலுள்ள நகை விற்பனை நிலையமொன்றில்

இன்று (10) பிற்பகல் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நால்வர் துப்பாக்கியைக் காட்டி 03 இலட்சம் ரூபா ரொக்கப் பணம் மற்றும் தங்கநகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர்.




விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 36 மோதிரங்கள் மற்றும் 48 பென்டன்கள் ஆகியவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.




கொள்ளைச் சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் சந்தேகநபர்கள் போலி இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக ஹோமாகம பொலிஸ் நிலைய அதிகாரியொருவர் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »