பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் “வெல்லம்பிட்டிய குடு ரெஜின“ கைது.
கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய களனி பாலம், சேதவத்த , வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை (27) பொலிஸாரினால் சுற்றி வளைப்பொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது, “வெல்லம்பிட்டிய குடு ரெஜின“ என அழைக்கப்படும் பெண் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கிராண்ட்பாஸ் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.