Our Feeds


Wednesday, May 22, 2024

ShortNews Admin

பஸ்ஸின் டயரில் சிக்கி மாணவி பலி...!

 

மல்கொல்ல படிதலாவ பகுதியைச் சேர்ந்த 10 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் கருவாத்தோட்டம் பகுதியில் தனியார் பஸ்ஸின் டயரில் சிக்கி உயிரிழந்துள்ளார்.


இன்று (22) காலை புதிய கருவாத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடஹென்தென்ன பிரதேசத்தில் பஸ்ஸில் இருந்து இறங்கி குறித்த பஸ்ஸிற்கு முன்னால் வீதியைக் கடக்கச் சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


விபத்தில் படுகாயமடைந்த மாணவி, புதிய கருவாத்தோட்டம் பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.


விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »