Our Feeds


Wednesday, May 1, 2024

ShortNews Admin

வாகன இறக்குமதிக்கு அரசு தீர்மானித்தால், சில ஒழுங்குமுறை தயாரிக்க வேண்டும்


 இலங்கைக்குள் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முறையான ஒழுங்குமுறை வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டுமென இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து தீர்மானிக்க அரசு ஒரு குழுவை நியமிக்க வேண்டும் என அதன் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே குறிப்பிட்டார்

2017, 2018, 2019 ஆண்டுகளில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட வாகனங்களே 85% இறக்குமதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

15% புதிய வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் 85% அல்லது 95% ஜப்பானில் இருந்து கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் வாகனங்களை இறக்குமதி செய்தால், மக்கள் விரும்புவதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »