Our Feeds


Wednesday, May 1, 2024

SHAHNI RAMEES

#BREAKING: தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை அறிவித்தார் ஜனாதிபதி..!

 

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாட் சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

 

கொட்டகலை மைதானத்தில் நடைபெறும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

 

தொழில் அமைச்சர் என்ற ரீதியில் மனுஷ நாணயக்கார இதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »