Our Feeds


Saturday, May 25, 2024

ShortNews Admin

பாரிய மண்சரிவுகள் ஏற்படலாம் - தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை !

சில பிரதேசங்களில் 350 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்துள்ளதாகவும் இதன் காரணமாக சிலநாட்களில் சிறிய மழை பெய்தாலும் மண்சரிவு அபாயம் ஏற்படலாமெனவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.


தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் சிரேஷ்ட ஆலோசகர் இதனை தெரிவித்துள்ளார்.

‘கேகாலை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சில இடங்களில் 350 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்துள்ளது. மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். எதிர்காலத்தில் சிறிதளவு மழை பெய்தாலும் மண்சரிவு ஏற்படலாம்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »