Our Feeds


Tuesday, May 28, 2024

ShortNews Admin

தேர்தலை ஒத்திவைப்பதற்கு நாமல் எதிர்ப்பு

 

தேர்தலை பிற்போடுவது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல என பாராளுமன்ற உறுப்பினரும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷ இன்று (28) தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் இடம்பெற்ற கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் நாமல் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தின் பதவிக் காலத்தை நீட்டிப்பது ஜனநாயக சமூகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளது.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »