Our Feeds


Sunday, June 2, 2024

ShortNews

வௌ்ளப்பெருக்கில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

 

புவக்பிட்டிய, எலிஸ்டன் தோட்டம், கெகில்ல பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

36 வயதான தாய், 7 வயது மகள் மற்றும் 78 வயதான தாத்தா ஆகியோரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை 2.00 மணிக்கும் 3.00 மணிக்கும் இடையில் வீட்டின் அருகில் உள்ள கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »