ஜனாஸாக்களை எரிக்குமாறு விஷேட நிபுணர் குழுவே பரிந்துரை
வழங்கியது என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டார்.சன்ன பெரேரா தலைமியிலான பேராசிரியர் மெத்திகா விதானகே உள்ளிட்டோர் நிபுனர் குழு இந்த பரிந்துரையை வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.
அப்போதய அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில கூட கொவிட் ஜனஸாக்களை அடக்க செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்ததாக அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டார்.
அடக்கம் செய்ய அனுமதி அளிக்காதது நல்ல விடயம் என குறித்த நிபுணர் குழுவிற்க்கு ஒரு குறித்த மதத்தை சேர்ந்த மதகுரு கடிதம் எழுதி இருந்தாக அவர் குறிப்பிட்டார்.