இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான உடன்படிக்கை இன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.
அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன இது தொடர்பில் நேற்று விளக்கமளித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் விரிவான விளக்கம் ஜனாதிபதியினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது. அது தொடர்பான உடன்படிக்கையில் இன்று கைச்சாத்திடுவதற்காக பாரிஸ் கழகத்தின் அதிகாரிகளை சந்திப்பதற்காக நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் திறைசேரியின் பிரதானி இராஜாங்க அமைச்சர்கள் உள்ளிட்ட இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார். (