இளையோர் சாதிக்கட்டும் எனக்கு பதவி வேண்டாம்
- முஸ்லிம் மீடியா போரம் தலைவர் பதவியை விட்டுக் கொடுத்து முஸ்லிம் அமைப்புகளுக்கு முன்னுதாரணம் காட்ட துணிந்தார் மூத்த பத்திரிக்கையாளர் NM அமீன்இலங்கை முஸ்லிம் ஊடகவியலாளர்களை கொண்ட “முஸ்லிம் மீடியா போரம்” அமைப்பின் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான “வருடாந்த பொதுக்கூட்டம்” எதிர்வரும் 30.06.2024ம் திகதி ஞாயிற்றுக் கிழமை கொழும்பு தபாலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
குறித்த புதிய நிர்வாக தேர்வில் தற்போதைய தலைவரும் மூத்த பத்திரிக்கையாளருமான NM அமீன் அவர்கள் தனது வயது முதிர்வு மற்றும் சமூக அக்கரையை மேற்கோள் காட்டி புதிய இளம் தலைவர்களுக்கான வாய்புகளை வழங்கும் விதமாக மீண்டும் நிர்வாகத் தேர்வுக்கு போட்டியிடுவதில்லை என்ற முடிவை எடுத்திருப்பதாக தெரியவருகிறது.
சமூக அமைப்புகளை சமூகத்திற்காக சிறப்பாக வழிநடத்தும் புதியவர்களிடம் ஒப்படைத்து அவர்களுக்கு துணை நிற்பதுதான் மூத்தவர்களின் பண்பாக இருக்க வேண்டும் என்பதை தான் நடைமுறையில் காட்ட விரும்புவதாக தெரிவித்துள்ள NM அமீன் அவர்கள் அதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளார்.
இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் கட்சிகளின் தலைவர்கள் என பலரும் ஆண்டுகள் கடந்தாலும் தமது பதவிகளை விட்டுக்கொடுக்காமல் இழுத்துப் பிடித்துக் கொண்டு சுகபோகம் அனுபவிக்கும் நிலையில் மூத்த பத்திரிக்கையாளர் NM அமீன் அவர்களின் இந்த முடிவு சமூக மட்டத்தில் சிலாகித்து பேசப்படும் செய்தியாக மாறியுள்ளது.
மாற்றம் வருமா? அல்லது பழையதுதான் மாற்றமென்று தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.