லங்கா ஐஓசி நிறுவனம் 100 ஒக்டேன் ரக பெற்றோலை நேற்று (02) முதல் சந்தைக்கு விநியோகித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
அமைச்சர் தனது எக்ஸ் கணக்கில் குறிப்பொன்றையிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் தலைவர்கள் குழுவொன்று தம்மை சந்தித்து கலந்துரையாடியதாக அமைச்சர் தெரிவித்தார்.
லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிலைய விஸ்தரிப்புத் திட்டம், மசகு எண்ணெய் சந்தை, எண்ணெய் தாங்கி வளாக அபிவிருத்தி, எரிபொருள் விலை சூத்திரம் மற்றும் உத்தேச இந்தியா-இலங்கை எரிபொருள் குழாய்த்திட்டம் உள்ளிட்டவைக் குறித்து அங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.