கொழும்பு – கொம்பனிதெரு பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பின் 67 வது மாடியிலிருந்து வீழ்ந்து இரண்டு பேர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
15 வயது மதிக்கத்தக்க இருவரே இவ்வாறு வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.