உயர் தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டு தற்போது மீள் திருத்தத்திற்கான காலக்கெடுவும் முடிவடையவுள்ள நிலையில் திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் 70 மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகளை குறித்த மாணவிகளின் இஸ்லாமிய கலாசார ஆடையை குறிப்பிட்டு நிறுத்தி வைத்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. என IDM Nations Campus நிறுவனரும் கல்வியியல் செயல்பாட்டாளருமான கலாநிதி V ஜனகன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில், பெண்களுக்காக பெண்களினால் நடத்தப்பட்டு வரும் Rise Up Academy கல்வி நிலையத்தின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே கலாநிதி ஜனகன் மேற்கண்டவாரு தெரிவித்துள்ளார்.
பரீட்சையின் மீள் திருத்தத்திற்கான காலக் கெடுவும் முடிவடையவுள்ள நிலையில் மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகளை உடனடியாக வெளியிட்டு அவர்களின் அடுத்த கட்ட கல்வி செயல்பாடுகளுக்கு அனைத்துத் தரப்பினரும் உதவ வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.