Our Feeds


Saturday, July 20, 2024

Sri Lanka

PHOTOS: ஹிஸ்புல்லாஹ்வினால் வெளிநாட்டு நிதி அன்பளிப்பின் மூலம் உருவாக்கப்பட்ட “மட்டக்களப்பு பல்கலைக் கழகம்” ஜனாதிபதியினால் இன்று திறந்து வைப்பு.



மட்டக்களப்பு, பூனானையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சர்வதேச விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற மாபெரும் நிகழ்வில் மாணவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. 


குறித் நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுத்தீன், மு.க எம்.பி க்களான ஹரீஸ், பைசால் காசீம், அஇமக முன்னாள் எம்.பி க்களான அமீர் அலி, அப்துல்லாஹ் மஹ்ரூப் மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். 


சவுதி அரேபியாவின் ஒரு தனி நன்கொடையாளரினால் வழங்கப்பட்ட பெருந்தொகை நிதி ஆதாரத்தைக் கொண்டு குறித்த பல்கலைக் கழகம் முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்வினால் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கதாகும். 










Subscribe to this Blog via Email :
Previous
Next Post »