Our Feeds


Sunday, August 4, 2024

Admin

பூனைகளின் ஒட்டுண்ணியினால் நோய்களை குணப்படுத்த முடியும்!


பொதுவாக பூனைகளில் காணப்படும் ஒட்டுண்ணியின் உதவியுடன் அல்சைமர் மற்றும் பார்கின்சன் நோய்களை குணப்படுத்த முடியும் என சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது.

'டாக்ஸோபிளாஸ்மா கோண்டி' எனப்படும் இந்த ஒட்டுண்ணியைப் பயன்படுத்துவதன் மூலம், ஒரு குறிப்பிட்ட புரதத்தை நேரடியாக மூளைக்கு வழங்க முடியும், இது அல்சைமர் மற்றும் பார்கின்சன் நோயைக் குணப்படுத்தும் என்று விஞ்ஞானிகள் விளக்குகின்றனர்.

கிளாஸ்-க்ளோவ் மற்றும் டெல் அவிவ் பல்கலைக்கழகங்களில் மருத்துவ ஆராய்ச்சி இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பான விரிவான அறிக்கை 'நேச்சர் மைக்ரோபயாலஜி' என்ற மருத்துவ இதழில் வெளியாகியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »