Our Feeds


Saturday, August 17, 2024

Admin

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!


நாட்டில் பலத்த மழை பெய்து வருவதால் ஐந்து மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, காலி, களுத்துறை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு  2 ஆம் நிலை (ஆம்பர்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலி – எல்பிட்டிய, நெலுவ, யக்கலமுல்ல மற்றும் நாகொட பிரதேச செயலாளர் பிரிவுகள் (டி.எஸ்.டி) மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்

களுத்துறை – இங்கிரிய, ஹொரண, புலத்சிங்கள மற்றும் மத்துகம பிரதேச செயலக பிரிவுகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்

மாத்தறை – பிடபெத்தர பிரதேச செயலக பிரிவுகள்  மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்

இரத்தினபுரி- குருவிட்ட, இரத்தினபுரி, எலபாத, எஹலியகொட மற்றும் கலவான பிரதேச செயலக பிரிவுகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்


இதேவேளை, கீழ்வரும் பகுதிகளுக்கு  1 ஆம் நிலை (மஞ்சள்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களுத்துறை – வலல்லாவிட்ட மற்றும் பாலிந்தநுவர பிரதேச செயலக பிரிவுகள்  மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்

கேகாலை- தெஹியோவிட்ட, தெரணியகல, வரக்காபொல, யட்டியந்தோட்டை, கேகாலை பிரதேச செயலக பிரிவுகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்

மாத்தறை – அத்துரலிய பிரதேச செயலக பிரிவுகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்

இரத்தினபுரி- பெல்மதுல்ல, நிவித்திகல பிரதேச செயலக பிரிவுகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்


இந்த மண்சரிவு எச்சரிக்கைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை (18) அதிகாலை 5.00 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »